Categories: இந்தியா

சிபிஐ கைது என்பது ‘இன்சூரன்ஸ்’ கைது.! உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு பரபரப்பு வாதம்…

Published by
மணிகண்டன்

டெல்லி: மதுபான கொள்கை வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் கடந்த மே 10ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவால் இடைக்கால ஜாமீன் பெற்று இருந்தார். பின்னர் ஜாமீன் காலம் முடிந்து ஜூன் 2இல் திகார் சிறையில் சரணடைந்தார்.

இதனை அடுத்து, டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அண்மையில், அமலாகாத்துறை பதிவு செய்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதகவே, இதே மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு இருந்தார். அதானல் இடைக்கால ஜாமீனில் வெளியே வரமுடியாத நிலை உருவானது.

இதனால் சிபிஐ கைது செய்ததற்கு எதிராக கெஜ்ரிவால் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அடங்கிய அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணையில், கெஜிரிவால் தரப்பு வழக்கறிஞர் சிங்வி வாதிடுகையில், இந்த மதுபான வழக்கு பதியப்பட்டு 8 மாத விசாரணை வரையில் கெஜ்ரிவாலை கைது செய்யவோ, விசாரணை செய்யவோ சிபிஐ நினைக்கவில்லை.

இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு கைது செய்ய எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அமலாக்க வழக்கில் வெளியில் வரக்கூடாது என கூடுதல் இன்சூரன்ஸ் போல சிபிஐ கெஜ்ரிவாலை கைது செய்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக மூன்று விடுதலை (ஜாமீன்) உத்தரவுகள் உள்ளன.

கெஜிரிவால் அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கிறார். வெளியில் அவரால் இந்த வழக்குக்கு இடையூறு நேராது. வழக்கில் கெஜ்ரிவால் தனது அதிகாரத்தை பயன்படுத்த மாட்டார் என்பதை உச்சநீதிமன்றம் இன்னும் கருதவில்லை. கெஜ்ரிவாலின் நேர்மையை உச்சநீதிமன்றம் சோதிக்கிறது.  ஆனால் இடைக்கால ஜாமீன் முடிந்ததும் ஜுன் 2 நேர்மையாக கெஜிரிவால் சரணடைந்தார்.

சிபிஐ கைது தொடர்பான நீதித்துறை விளக்கம் எங்கே.?  அந்த விளக்கம் கெஜ்ரிவாலுக்கு கொடுக்கப்படவில்லை. ஜாமீன் வழங்குவதற்கு முன்னாதாக் சிபிஐ கைது ஏன்? இது உண்மையில் தேவையா? என்ன நோக்கத்திற்காக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார் .? என பல்வேறு கேள்விகளை கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

22 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago