Parliament sengol [Image- Twitter/@Amitsha]
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் மன்னர் கால வரலாற்று புகழ் மிக்க செங்கோல் இடம்பெற உள்ளது.
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் முழுவதும் முடிக்கப்பட்டு வரும் மே 28 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தில் இருந்து வழங்கப்பட்ட செங்கோல் இடம்பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். முழுதும் தங்கத்தால் ஆன இந்த செங்கோலின் உச்சியில் நந்தியின் உருவம் இடம்பெற்றுள்ளது.
இந்த செங்கோலை பிரதமர் மோடி, புதிதாக திறக்கப்படும் நாடாளுமன்ற அலுவலகத்தில் வைப்பார் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து அமித்ஷா தனது ட்விட்டரில் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் சின்னம் இந்த செங்கோல் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமிர்த காலின் தேசிய அடையாளமாக மக்களவை சபாநாயகர் மேடைக்கு அருகில், இந்த செங்கோல் இடம்பெறும் எனவும், இந்த செங்கோல் நியாயமான மற்றும் சமமான ஆட்சிக்கான அடையாளம் என தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…