நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன்!

Published by
Rebekal

நேரம் பார்த்து காத்திருந்து மனைவியின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கணவன் கைது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியை சேர்ந்த ஹர்சுலே எனும் இடத்தில் வசித்து வரக்கூடிய கட்டிட ஒப்பந்தகாரர் ஒருவரின் மனைவிக்கும் தம்பலே என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கட்டிட ஒப்பந்தகாரர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்வதால், அதை பயன்படுத்திக்கொண்ட தம்பலே அவரது வீட்டிற்கு சென்று ஒப்பந்தகாரர் மனைவியுடன் அடிக்கடி தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது கள்ளக்காதல் குறித்து கட்டிட ஒப்பந்தகாரரிடம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அடிக்கடி தனது மனைவியுடன் இது குறித்து கேட்டு தகராறு செய்து வந்த ஒப்பந்தகாரர் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்ததால் திட்டமிட்டு தம்பலேவை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இந்நிலையில் வெளியூர் செல்வது போல சென்றுவிட்டு இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதை அருகில் உள்ளவர்கள் மூலம் அறிந்து, அதன் பின் வீட்டிற்கு வந்து தம்பலேவை கொலை செய்துள்ளார் ஒப்பந்தகாரர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்த ஒப்பந்தகாரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அல்-நசீர் அணியிலேயே மேலும் 2 ஆண்டுகள் விளையாடும் ரொனால்டோ.. சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…

15 minutes ago

”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!

சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…

49 minutes ago

ஜூலை 4ஆம் தேதி விஜய் தலைமையில் த.வெ.க. மாநில செயற்குழு கூட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…

1 hour ago

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

1 hour ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

2 hours ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

3 hours ago