ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாகவும், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்படுவதாகவும் இந்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளும், ஆதரவுகளை எழுந்து வருகிற நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆர்வலரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, காஷ்மீர் மக்கள் நான், எனது பெற்றோர் மற்றும் எனது தாத்தா பாட்டி ஆகியோர் இளம் வயது முதலே போராட்டத்தில்தான் இருக்கிறார்கள். காஷ்மீர் குழந்தைகள் 70 ஆண்டுகளாக வன்முறைக்கு மத்தியில் தான் வாழ்கிறார்கள்.
எனது குடும்பம் தெற்கு ஆசியா தான். அதில் 1.8 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் வெவ்வேறு கலாச்சாரம், மதங்கள், மொழிகளுடன் வாழ்ந்து வருகிறார்கள். நாம் அனைவரும் அமைதியாக தான் வாழ்கிறோம் என நம்புகிறேன். காஷ்மீர் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைகளை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.
மேலும் தெற்கு ஆசியாவில் இருக்கும் சர்வதேச சமூக அமைப்புகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களது பாதிப்பு குறித்து கருத்தில் கொள்வார்கள் என நம்புகிறேன். 70 ஆண்டுகால போராட்டத்தை அமைதியான முறையில், சுமுக தீர்வு காண்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் மலாலா தனது ட்வீட்டர் பக்கத்தில் உருக்கமான கருத்தினை பதிவிட்டுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், எதிர்பாராத விதமாக நேற்று இஸ்ரேலுக்கு ஆதரவாக…
டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…
ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…