Categories: இந்தியா

நாய்க்குட்டிக்கு பெயர் வைத்த விவகாரம்.! ராகுல்காந்தி – சோனியா காந்தி மீது புதிய புகார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சமீபத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தாயார் சோனியா காந்திக்கு நாய்க்குட்டி ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அதாவது, கோவாவில் இருந்து வாங்கி வந்த ஜேக் ரசல் டெரியர் எனும் இனத்தை சேர்ந்த குட்டி நாயை காங்கிரஸ் மூத்த தலைவரும் தாயாருமான சோனியா காந்திக்கு பரிசாக வழங்கினார்.  இந்த நாய்க்குட்டியை சோனியா காந்தி மகிழ்ச்சியாக பெற்று கொண்டார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோக்கள் சர்வதேச விலங்குகள் தினத்தையொட்டி வெளியிடப்பட்டது.

இதன்பின் அந்த நாய் ககுட்டிக்கு ‛நூரி’ என பெயரிட்டு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியான நிலையில், நாய்க்குட்டிக்கு ‛நூரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார். சோனியா காந்தியின் கைகளில் நாய்க்குட்டி இருக்கும் போட்டோ, வீடியோவை பலரும் ரசித்த நிலையில், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அந்த நாய்க்குட்டிக்கு சூட்டப்பட்டுள்ள ‛நூரி’ எனும் பெயர் தான் சர்ச்சையின் காரணமாக அமைந்தது. இதுதொடர்பாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் கூறுகையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ராகுல் காந்தி முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி உள்ளதாக அவர் சாடியுள்ளார்.

இந்த நிலையில், சோனியா காந்திக்கு, ராகுல் காந்தி பரிசாக வழங்கிய நாய்க்கு நூரி என்று பெயர் சூட்டியதற்கு, இஸ்லாமிய அமைப்பு ஒன்று புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நூரி என்ற பெயர் குரானில் இருப்பதாகவும், இந்த பெயரை நாய் குட்டிக்கு வைத்து முஸ்லிம் பெண்களை அவமானப்படுத்தி இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மகள்கள் ஏராளமானவர்கள் நூரி எனும் பெயரை கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில் ராகுல் காந்தியின் இந்த செயல் என்பது அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்தின் மீதான மரியாதையை எதிர்மறையாக பிரதிபலிக்கிறது என்று குற்றசாட்டியுள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஈட்டி எறிதல் தரவரிசை பட்டியலில் ‘நம்பர் 1’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா.!

டெல்லி : தொடர்ச்சியாக ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற இந்தியாவின் நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, மீண்டும் நாட்டிற்கு…

18 minutes ago

இனி இவர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை.., கூடுதல் தளர்வுகளை அறிவித்த தமிழ்நாடு அரசு.!

சென்னை : தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பதற்கான தகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

34 minutes ago

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

18 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

19 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

19 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

20 hours ago