MLA Sivakumar
MLA VS Sivakumar : நாடளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் எம்.எல்.ஏ. சிவகுமார் வாக்காளரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.எல்.யான எம்.ஏ.சிவகுமார் வாக்களிக்க வரிசையில் நின்ற ஒரு வாக்காளரை கன்னத்தில் அறையும் வீடியோவானது வைரலாகி வருகிறது.
ஆந்திராவில் குண்டூரில் தெனாலி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏ.விடம் வாக்காளர் ஒருவர் வரிசையில் வருமாறு கூறி உள்ளார். இதை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஏம்.எல்.ஏ சிவகுமார் திடிரென அந்த நபரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.
அறை வாங்கிய அந்த நபரும் பதிலுக்கு எம்.எல்.ஏ சிவகுமாரை தாக்க எம்.எல்.ஏவின் உதவியாளர்கள் அறைந்த அந்த நபரை சரமாரியாக தாக்கினார்கள். இதை கண்ட மற்ற வாக்காளர்கள் அந்த தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பிற்காக அங்க நின்றிருந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…