Categories: இந்தியா

வரிசையில் வர சொன்ன வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ ! வைரலாகும் வீடியோ !

Published by
அகில் R

MLA VS Sivakumar : நாடளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவானது இன்று நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் உள்ள வாக்குச்சாவடியில் எம்.எல்.ஏ. சிவகுமார் வாக்காளரை அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் 25 மக்களவை தொகுதிகளுக்கும், 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திராவில் குண்டூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் எம்.எல்.யான எம்.ஏ.சிவகுமார் வாக்களிக்க வரிசையில் நின்ற ஒரு வாக்காளரை கன்னத்தில் அறையும் வீடியோவானது வைரலாகி வருகிறது.

ஆந்திராவில் குண்டூரில் தெனாலி தொகுதியில் வாக்களிக்க வரிசையில் செல்லாத எம்.எல்.ஏ.விடம் வாக்காளர் ஒருவர் வரிசையில் வருமாறு கூறி உள்ளார். இதை தொடர்ந்து இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது ஏம்.எல்.ஏ சிவகுமார் திடிரென அந்த நபரின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

அறை வாங்கிய அந்த நபரும் பதிலுக்கு எம்.எல்.ஏ சிவகுமாரை தாக்க எம்.எல்.ஏவின் உதவியாளர்கள் அறைந்த அந்த நபரை சரமாரியாக  தாக்கினார்கள். இதை கண்ட மற்ற வாக்காளர்கள் அந்த தாக்குதலை தடுக்க முற்பட்டுள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூகத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.

இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும், பாதுகாப்பிற்காக அங்க நின்றிருந்த காவல்துறையினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

7 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

7 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

7 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

9 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

9 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

9 hours ago