நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 2,29,92,517 ஆக அதிகரித்துள்ளது. அதுபோல் நேற்று ஒரே நாளில் 3,876 பேர் கொரோனவுக்கு பலியான நிலையில், 2,49,992 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் 3,56,082 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,90,27,304 ஆக உள்ளது. தற்போது கொரோனாவுக்கு மருத்துவமனையில் 37,15,221 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவில் இருந் குணமடைந்தோர் விகிதம் 82.75% ஆகவும், இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 17,27,10,066 ஆக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உலக முழுவதும் 159,607,702 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 3,317,747 பேர் உயிரிழந்துள்ளனர். 137,298,659 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் உலக அளவில் அமெரிக்கா 33,515,308 பாதிப்புகளுடன் முதல் இடத்திலும், இந்தியாவில் 22,992,517 பேர் பாதிக்கப்பட்டு இரண்டாவது இடத்திலும் உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…