Mother Beating Son [file image]
ஹரியானா : ஒரு கொடூர தாய் தனது மகனை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் தனது 11 வயது மகனை கொடூரமாக தாக்கும் தாயின் வீடியோ பார்ப்பதற்கே பதற்றமடைய செய்கிறது. இந்த வீடியோவை சிறுவனின் தந்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், அந்த தாய் தனது சொந்த மகனின் மேலே அமர்ந்து கொண்டு மாறி மாறி அடிப்பதும், வார்த்தைகளால் திட்டுவதும் தெளிவாக தெரிகிறது. இந்த கொடூர செயலை செய்தவர் ஒரு மருத்துவர் என்றும், சூரஜ்குண்ட் பகுதியை சேர்ந்தவரும் என தெரிய வந்துள்ளது.
தாக்கப்பட்ட சிறுவனின் தந்தை, இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல்துறையிடம் புகார் அளித்த அவர், தனது மகனை அடிக்கும்பொழுது தடுக்க முயன்றதாகவும், ஆனால் அவரது மனைவி விஷம் குடித்துவிட்டு, குழந்தைக்கும் கொடுத்து விடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக குழந்தை பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்று கொண்ட குழந்தைகள் நலக் குழுவின் (சிடபிள்யூசி) உத்தரவனின் பேரில் சூரஜ்குண்ட் பகுதி போலீசார், கொடூர தாக்குதல் நடத்திய தாய் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…