செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் நுழைவு தேர்வா? – தேர்வு மையம் விளக்கம்..!

Published by
Edison

செப்டம்பர் 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் தவறானது என்று தேசிய தேர்வு மையம் விளக்கமளித்துள்ளது.

தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட்) செப்டம்பர் 5 ஆம் தேதி நடத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.அத்தகைய அறிவிப்பு போலியானது மற்றும் மார்பிங் செய்யப்பட்டது.மேலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தேசிய தேர்வு மையம் (என்.டி.ஏ) அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

JEE முதன்மை 2021 தேர்வு தேதிகள் :

அறிவிப்பு போலியானது என்றாலும், நுழைவுத் தேர்வுகளின் தேர்வு தேதிகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை இது எடுத்துக்காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 14 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள், இருப்பினும்,நடப்பு ஆண்டிற்கான விண்ணப்ப படிவம் இன்னும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, விண்ணப்ப படிவங்கள் தேர்வு தேதிக்கு குறைந்தது 60 நாட்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படும்.

இதற்கிடையில்,நீட் 2021 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் கொரோனா பரவல் காரணங்களால்,குறிப்பிட்ட தேர்வு நடைபெறுவது சாத்தியமில்லை.

கடந்த 2020 ஆம் ஆண்டில், மருத்துவ நுழைவுத் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.எனவே,இந்த ஆண்டும் நீட் தேர்வு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் முன்னதாக செய்தியாளர்களுக்கு தெரிவித்தனர்.

இதனால்,நீட் தேர்வு ஒத்திவைக்கப்படும் என்றும் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Edison

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago