இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டு காலமாக கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது பல நாடுகளில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 4.20 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 3.48 கோடி பேருக்கும், இரண்டாவது டோஸ் 72.21 லட்சம் பேருக்கும் போட பட்டதாகவும், இந்தியாவில் ஒரே நாளில் 27.23 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40.60 லட்சம் தடுப்பூசிகளும் ராஜஸ்தானில் 40.47 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில், 19.64 லட்சம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…