இறந்த கொரோனா நோயாளிடமிருந்து போனை திருடிய செவிலியர்..!

Published by
பால முருகன்

உத்தரகண்ட்டில் கொரோனா நோயாளியின் தொலைபேசியை  செவிலியர் திருடியதாகக் கூறப்படுகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் ருகையா என்ற செவிலியர் ஒருவர் கொரோனா நோயாளியிடம் இருந்தது அவரது தொலைபேசியை அவர் இறந்த பிறகு திருடினார் என கூறப்படுகிறது. இதனையடுத்து, இறந்த நபரின் மகனான அமன்தீப் கில் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், தனது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மே 8-ஆம் தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய தொலைபேசி திருடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமன்தீப் கில் புகாரை ஏற்ற காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர், விசாரணையில் தொலைபேசியை சல்மான் அகமது என்பவர் வைத்திருந்தது தெரியவந்தது. அகமதுவைப் பிடித்து விசாரணை நடத்தியதில் சல்மான் அகமது ருகையாவிடம் இருந்து தொலைபேசி வாங்கியதாக கூறினார்.

பின்னர், ருகையாவை பிடித்து விசாரணை செய்ததில் கொரோனா நோயாளிடமிருந்து தொலைபேசியை திருடியதாக ஒப்புக்கொண்டார். திருடிய தொலைபேசியை மறுநாளே தனது நண்பர் சல்மானிடம் கொடுத்ததாகவும், மேலும், மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தையும் திருடியாதாக ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து, ருகையாவை போலீசார் கைது செய்தனர்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago