பறவை கூட்டை முக கவசமாக அணிந்து ஓய்வூதியம் வாங்க வந்த முதியவர்!

Published by
Rebekal

தெலுங்கானாவில் முக கவசம் அடிக்கடி வாங்க முடியாததால் பறவை கூட்டை முக கவசமாக  அணிந்து ஓய்வூதிய தொகை வாங்க வந்த முதியவர்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை உருவாகி பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாளுக்கு நாள் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதிலும் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளிகளை பின்பற்றி தூய்மையாக இருப்பதும் தான் கொரோனா தொற்றை குறைப்பதற்கான வழி என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது நாடு முழுவதிலும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. எனவே 200 ரூபாய் அபராதம் கட்டுவதற்கு பதிலாக முகக்கவசம் அணிந்து விட்டு செல்லலாம் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஆனால் அதற்கு பதிலாக அடிக்கடி முகக்கவசம் வாங்க முடியாமல் தனக்கான ஒரு கவசத்தை பறவை கூட்டில் இருந்து செய்து அணிந்து வந்த முதியவரின் செயல் ஒன்று தெலுங்கானாவில் பெரிதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மக்புப் நகர் எனும் மாவட்டத்தில் உள்ள சின்னமுனுகல் சாட் பகுதியை சேர்ந்த மேகலா குர்மய்யா எனும் முதியவர் தனது ஓய்வூதிய தொகையை வாங்குவதற்காக மண்டல அலுவலகம் வரை சென்ற பொழுது, துணியாலான முக கவசத்திற்கு பதிலாக பறவைக்கூட்டத்தினால் ஆன முக கவசத்தை அணிந்து சென்றுள்ளார். இவரது இந்த செயல் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளதுடன் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

17 minutes ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

57 minutes ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

1 hour ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

2 hours ago

அருளை கட்சியில் இருந்து நீக்க அன்புமணிக்கு அதிகாரம் இல்லை – ராமதாஸ்!

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளை கட்சியில் இருந்து நீக்குவதற்கு தலைவர்…

2 hours ago

மகன் வீடியோக்களை நீக்க சொல்லி மிரட்டல்? மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…

4 hours ago