சப்னா என்ற பெண் ஊழியர் உரிமையாளரான நிகிதாவிடம் சம்பளத்தை கேட்க, அவர் தனது வீட்டு நாயை வைத்து ஊழியரை கடிக்க செய்துள்ளார்.
டெல்லியில் ஆயுர்வேத ஸ்பா சென்டர் நடத்தி வருபவர் நிகிதா. இவரது கடையில் வேலை செய்பவர் சப்னா. இவர் அந்த ஸ்பா சென்டரில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை பணி புரிந்ததை அடுத்து, தான் வேலை செய்ததற்கான சம்பளத்தை உரிமையாளரான நிகிதாவிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, நிகிதா நாயை விட்டு கடிக்க வைத்துள்ளார். இதனால் அந்த பெண் ஊழியரின் முகத்தில் 15 தையல்கள் போடப்பட்டுள்ளது மட்டுமில்லாமல், அவரது 2 பற்களும் உடைந்துள்ளது.
ஜூன் 11-ஆம் தேதி நடந்த இச்சம்பவத்திற்கு டெல்லி காவல்துறையானது 20 நாட்கள் அவகாசம் எடுத்த பின்னர் ஜூலை 2-ம் தேதி எஃப். ஐ. ஆர் பதிவு செய்தனர். அதுவும் இந்த விவகாரத்தில் எம். எல். ஏ மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனம் தலையிட்ட பின்னரே எஃப். ஐ. ஆர் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நிகிதா மீது காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனையடுத்து சப்னா தனது சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவமனையில் செய்து வந்தார். தற்போது நிகிதா தனது இடத்திலிருந்து தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…
சென்னை : காலங்களை கடந்த ராமாயணம் கதை மீண்டும் திரைப்படமாக வெளிவருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும்,…
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…