மிகப்பெரிய சதி திட்டத்ததோடு எல்லையில் 300 பங்காளிகள் – வாலாட்டினால் நறுக்.. உசார்.,எச்சரிக்கை

Published by
kavitha

யூனியன் பிரதேசமான காஷ்மீருக்குள் அதிக  எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை நுழைக்க பாகிஸ்தான் ராணுவம் சதித்திட்டத்தை தீட்டி வைத்துள்ளதாக உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து உளவுத்துறை தெரிவித்துள்ள தகவலின் படி கரேன் பிரிவுக்கு எதிரே இருக்கும் ஆத்முகாம், துத்னியல் மற்றும் தஹந்தபானி ஆகிய பகுதிகளில் இருக்கும் ஏவுதளங்களில் 80 தீவிரவாத குழுக்கள் தென்படுகிறது.

இது பாகிஸ்தான் ராணுவம்  கட்டுப்பாட்டு பகுதிக்கு மிக அருகில் உள்ளது.இதிலிருந்து சதி செயலுக்கு திட்டமிட்டுவதை தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஜெய்ஷ்-இ-முகமது,லஷ்கர்-இ-தொய்பாவை போன்ற தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் அடங்கிய குழுவானது நீலம் பள்ளத்தாக்கு பக்கத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இக்குழு எப்போது வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் ஊடுருவ காத்து கொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் கிராம பகுதியான சுஜியனில் சுமார் 40 தீவிரவாதிகள் முகாமிட்டு உள்ளதாக பாதுக்காப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தீவிரவாதிகள் அனைவரும் ஜெய்ஷ் மற்றும் அல் பத்ரைச் சேர்ந்தவர்கள் என்றும் கிருஷ்ணா காட்டிக்கு எதிரே உள்ள மாதர்பூர் மற்றும் நட்டார் பகுதிகளிலும் சுமார் 20 பயங்கரவாதிகள் உலவி வருவதாகவும்,மேலும் 35 தீவிரவாதிகள் பிஞ்சர் காலிக்கு எதிரே உள்ள லாஞ்சோட்டில் முகாமிட்டுள்ளனர்.

மேலும்  25 பயங்கரவாதிகள் அடங்கிய குழு தக் கானா பகுதியில் இருந்து கொண்டு  இந்தியாவை நோட்டமிட்டு நுழைய திட்டமிட்டு காத்து இருப்பதாக எச்சரிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்குள் நுழைய  தீவிரவாதிகள் அனைவருக்கும் பாகிஸ்தான் ராணுவ உதவி புரிய தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு அனைத்து எல்லையிலும் தீவிரவாதிகளின் முகாம்கள் குறித்து  மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 250 முதல் 300 பயங்கரவாதிகள் ஏவுதளங்களில்  உள்ளனர்.

ஊடுருவும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள், ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பு மிக வலுவடைந்து விட்டது. அதனால் தீவிரவாதிகள் இதில் வெற்றியடைய மாட்டார்கள். 

காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் தற்போது 200 பயங்கரவாதிகளுக்கும் குறைவானவர்களே இருக்கக்கூடும்.

வடக்கு காஷ்மீரில் 50 முதல் 60 பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.ஆனால் தீவிரவாதிகளில்பெரும்பாலோர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்  என்று கூறினார்.

Published by
kavitha

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

20 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

58 minutes ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago