கடந்த மாதம் 21-ம் தேதி மஹாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைபட்டது . கூட்டணி கட்சிகளான பாஜக , சிவசேனா 161 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த இரண்டு கூட்டணி கட்சிகளுக்கு இடையே அதிகார பகிர்வில் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க பெருபான்மை இல்லாததால் எந்த கட்சியும் முடியாமல் போனது. பின்னர் மஹாராஷ்டிராவில் கடந்த 12-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் பாஜக உடனான கூட்டணியை சிவசேனா முறித்து கொண்டு சிவசேனா தனது தலைமையில் புதிய ஆட்சி அமைக்க காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு உடன் பேச்சு வார்த்தை நடத்தியது.
நேற்று மாலை மும்பையில் உள்ள நேரு அரங்கத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசு மற்றும் சிவசேனா தலைவர்களும் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் , சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு அமைக்க மூன்று கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு உள்ளது என கூறினார்.
இந்நிலையில் இன்று காலை மஹாராஷ்டிராவில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டது. முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக அஜித் பவார் இன்று காலை மஹாராஷ்டிரா ஆளுநர் முன் பதவியேற்று கொண்டனர்.இதற்கு தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் பட்டேல் “இது எங்கள் கட்சியின் முடிவல்ல. இதற்கு சரத் பவாரின் ஆதரவு இல்லை ” என கூறினார்.
இந்நிலையில், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் , கட்சியும், குடும்பமும் பிளவுபட்டு விட்டது என பதிவிட்டு உள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…