கர்நாடக முதல்வர் யார்.? காங்கிரஸ் தலைமையின் தற்போதைய நிலைப்பாடு என்ன.?

Published by
மணிகண்டன்

கர்நாடகா புதிய முதல்வர் யார் என கட்சி தலைமை அலுவலகத்தில் இன்றும் முக்கிய தலைவர்கள் மத்தியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் ஆகியும், 135 தொகுதிகளை வென்று கூட்டணி ஆதரவு இன்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ள காங்கிரஸ் கட்சி இன்னும் புதிய முதல்வர் யார் என அறிவிக்காமல் இருந்து வருகிறது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது இருவருமே காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உடன் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி விட்டனர். மல்லிகார்ஜுன கார்கே இந்த ஆலோசனை குறித்து ராகுல் காந்தி உடன் ஆலோசித்து இன்று மாலை அல்லது நாளை முடிவு வெளியாகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா செய்தியாளர்களிடம் டெல்லி காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே தெரிவித்து விட்டு சென்றார்.

டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா என இருவரில் ஒருவருக்கு முதல்வர் பதவியும், மற்றொருவருக்கு 2 முக்கிய துறைகளுடன் துணை முதல்வர் பதவி மற்றும் மாநில தலைமை பதவி ஆகியவை கொடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது காங்கிரஸ் தேசிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருவதால் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

1 hour ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

4 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago