பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார் என்று ராகுல் காந்தி கேள்வி தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்ற அவைகளில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ‘கிழக்கு லடாக்கில் தற்போதைய நிலைமை’ குறித்து விளக்கம் அளித்தார்.அவர் அளித்த விளக்கத்தில்,எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒரு இன்ச் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயார் என்று பேசினார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார் . அப்பொழுது அவர் பேசுகையில், கிழக்கு லடாக்கின் நிலைமை குறித்து நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டார்.பிரதமர் மோடி இந்தியாவிற்கு சொந்தமான இடங்களை சீனாவிடம் கொடுத்துவிட்டார். சீனா நுழைந்த இடத்திலிருந்து மிக முக்கியமான பகுதியான டெப்சாங் சமவெளி குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. உண்மை என்னவென்றால், பிரதமர் இந்தியப் பகுதியை சீனாவுக்குக் கொடுத்திருக்கிறார்.அவர் நாட்டுக்கு பதிலளிக்க வேண்டும்.
பிரதமர் ஒரு கோழை, அவரால் சீனாவிற்கு எதிராக நிற்க முடியாது. அவர் எங்கள் இராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கிறார்.இந்தியாவில் இதை செய்ய யாரும் அனுமதிக்கக்கூடாது.இந்த நாட்டில் உள்ள எல்லைகளை பாதுகாப்பது பிரதமரின் பொறுப்பாகும்.அவர் அதை எப்படி செய்வது என்பது அவருடைய பிரச்சினை, என்னுடையது அல்ல என்று பேசியுள்ளார்.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…