உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.இந்த வைரசால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி ,ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளது.இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் மாநில இடையிலான பேருந்து , உள்ளுர் விமான போக்குவரத்து , ரயில் சேவை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி வெளியே வருபர்வர்களை போலீசார் அறிவுரை கூறியும் , தடி அடி அடித்தும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் தியோரியாவில் உள்ள மெஹ்தா பூர்வா பகுதியில் ஒரு பெண் சாமியார் தனது வீட்டில் மத நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.இதையெடுத்து போலீசார் அந்த பெண் சாமியாரிடம் கூட்டத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை.பின்னர் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அந்த பெண் சாமியார் வாள் எடுத்து சுழற்றி போலீசாரை மிரட்டி உள்ளார். பின்னர் போலீசார் அந்த பெண் சாமியாரையும் , அங்கு இருந்தவர்கள் மீதும் தடியடி நடத்தினர். பிறகு போலீசார் பெண் சாமியாரையும் , சிலரையும் கைது செய்து உள்ளனர்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…