உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிரட்டி வருகிறது.இந்த வைரசால் தற்போது அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இத்தாலி ,ஸ்பெயின் மற்றும் ஈரான் உள்ளது.இந்த வைரஸை தடுக்க உலக நாடுகள் முயற்சி செய்து வருகிறது.
இதையெடுத்து கொரோனா வைரஸ் இந்தியாவில் அதி வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு ,மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதில் மாநில இடையிலான பேருந்து , உள்ளுர் விமான போக்குவரத்து , ரயில் சேவை போன்றவை நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க நாடுமுழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி வெளியே வருபர்வர்களை போலீசார் அறிவுரை கூறியும் , தடி அடி அடித்தும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேசம் தியோரியாவில் உள்ள மெஹ்தா பூர்வா பகுதியில் ஒரு பெண் சாமியார் தனது வீட்டில் மத நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்த கொண்டனர்.இதையெடுத்து போலீசார் அந்த பெண் சாமியாரிடம் கூட்டத்தை கலைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் போலீசாரின் பேச்சை கேட்கவில்லை.பின்னர் போலீசார் அங்கு இருந்தவர்களிடம் கலைந்து செல்லுமாறு கூறியுள்ளனர்.
இதனால் அந்த பெண் சாமியார் வாள் எடுத்து சுழற்றி போலீசாரை மிரட்டி உள்ளார். பின்னர் போலீசார் அந்த பெண் சாமியாரையும் , அங்கு இருந்தவர்கள் மீதும் தடியடி நடத்தினர். பிறகு போலீசார் பெண் சாமியாரையும் , சிலரையும் கைது செய்து உள்ளனர்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…