பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்.. காரில் அவசர சிகிச்சை பிரிவுக்குள் நுழைந்த போலீசார்.!

Published by
கெளதம்

சென்னை:பாலியல் தொல்லை அளித்த மருத்துவரை கைது செய்ய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு வரை காரிலேயே சென்ற போலீசாரால் பரபரப்பு.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் சதீஷ்குமார் என்பவரை கைது செய்ய, உணர்ச்சிவசப்பட்ட காவல்துறையினர் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்குள் தங்களது போலீஸ் வாகனத்தை ( xuv ) ஓட்டிச் சென்றதால் பரபரப்பானது.

இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் 26 வினாடிகள் கொண்ட வீடியோவில், ஒரு திரைப்படத்தின் காட்சியை போல் அந்த வீடியோ காட்சியளிக்கிறது. அதில், அவசர சிகிச்சைப் பிரிவில் நெரிசலான இடத்தில போலீஸ் கார் செல்வதைக் காட்டுகிறது. அதற்கு அங்கிருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் நோயாளிகளை வெளியே கொண்டு செல்லும் ஸ்ட்ரெச்சர்களை நகர்த்தி போலீசாரின் கார் வருகைக்கு உதவி செய்வதைக் காணலாம்.

இவ்வாறு, நோயாளிகளின் படுக்கைகளை அப்புறப்படுத்திவிட்டு, போலீசார் வாகனத்தை ஓட்டி சென்ற சம்பவம் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்ய வேண்டியதன் அவசியம் இருந்தாலும், நோயாளிகள் நிறைந்த அவசர வார்டு வழியாக இது மாதிரியான செயலில் ஈடுபடுவதால் நோயாளிகள் பற்றிய கேள்வி எழும் என்ற விமர்சனத்தை பலர் முன் வைக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பு கூறுகையில், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ் குமார், மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டருக்குள் ஒரு பெண் மருத்துவரை துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், போலீசார் கைது  செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் போரட்டத்தில் ஈடுட்ட நிலையில், சதீஷ் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

Published by
கெளதம்

Recent Posts

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

27 minutes ago

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒரு வார காலத்திற்கு தள்ளிவைப்பு – IPL நிர்வாகம் அறிவிப்பு.!

டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…

1 hour ago

ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!

ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…

2 hours ago

போர் பதற்றம்., நேரடி தகவல்கள் வேண்டவே வேண்டாம்! பாதுகாப்பு அமைச்சகம் அறிவுறுத்தல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…

3 hours ago

காஷ்மீரில் 7 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! இந்திய ராணுவம் அதிரடி!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…

3 hours ago

ஐபிஎல் 2025 போட்டிகள் காலவரையின்றி நிறுத்தம்!

டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…

4 hours ago