எமன் போல வேஷமிட்டு கொரோனா தடுப்பூசி போட வந்த காவலர் – வைரலாகும் புகைப்படம்!

Published by
Rebekal

மத்திய பிரதேசத்தில் கடந்த வருடம் மக்களே விழிப்புணர்வு ஆக்குவதற்காக எமதர்மராஜா போல வேடம் அணிந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எமன் போன்ற உடையில் வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் நிலையில், இந்தியாவில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்பொழுது வரையிலும் பல இடங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் தான் இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு நேரத்தில் மக்களை எச்சரித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு செய்வதற்கு முன் களப்பணியாளர்களாக பணியாற்றியது போலீஸ்காரர்கள் தான். வெளியில் வரக் கூடிய மக்களுக்கு கொரோனா போல ஹெல்மெட் அணிந்து வெளியில் அதிகம் செல்லும் பொழுது கொரோனா தொற்றிக் கொள்ளும் என்று விழிப்புணர்வுகளை பல்வேறு விதமாக மக்களுக்கு தெரிவித்து வந்தனர்.

அப்பொழுது எமதர்மராஜா போல வேடமிட்டு மக்களை விழிப்புணர்வு செய்தவர்தான் மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங். தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், கடந்த வருடம் தான் வேடமிட்டு இருந்த எமதர்மராஜா உடையை அணிந்து வந்து கொரோனா தடுப்பூசி கொண்டுள்ளார். இதுகுறித்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து போலீஸ் கான்ஸ்டபிள் ஜவஹர் சிங் அவர்கள் தெரிவிக்கையில், ஒவ்வொரு முன்னணி தொழிலாளியும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதும் தான் தனது நோக்கம். இந்த செய்தியை பரப்புவதற்காக தான் இவ்வாறு வேடமிட்டு வந்தேன் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

10 minutes ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

56 minutes ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

2 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

2 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

2 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

4 hours ago