பெட்ரோல் விலையை கண்டிக்கும் வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயணம் செய்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீரென தவறி விழ பார்த்த பொழுது அருகில் இருந்த பாதுகாவலர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி உள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கொல்கத்தாவின் ஹசாரா மோரிலிருந்து தலைமை செயலகம் வரை சுமார் 5 கிலோமீட்டர் வரையிலும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்துள்ளார். இந்த ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைச்சர் ஹக்கீம் அவர்கள் ஓட்டிச் செல்ல பின்னால் அமர்ந்திருந்த மம்தா பானர்ஜி பெட்ரோல் டீசலுக்கு எதிரான பதாகையை கழுத்தில் அணிந்த படி சென்றுள்ளார்.
பின் மக்களிடம் பேசிய அவர், மோடி அரசு இந்தியாவில் மக்களுக்கு எதிரான அனைத்தையும் விற்பனை செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் மம்தா பானர்ஜி அந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்ட முயற்சித்த பொழுது திடீரென தவறி விழ, அப்போது அருகில் இருந்த பாதுகாவலர் ஒருவர் சட்டென்று மம்தா பானர்ஜியை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…
சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…
தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…