கொரோனா எதிரொலி…இவர்களுக்கும் தேர்வு ஒத்திவைப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

Published by
Edison

புதுச்சேரி:கொரோனா பரவல் எதிரொலியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு நேற்று அறிவித்தது.

மேலும்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து,10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்நிலையில்,கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தை தொடர்ந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப் படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.வரும் ஜனவரி 19 ஆம் தேதி திருப்புதல் தேர்வு தொடங்கி நடைபெறவிருந்த நிலையில்,அவை ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக, புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

“கொரானா பெருந்தொற்று காரணமாக 10 மற்றும் 12 வகுப்புகளுக்கு வரும் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வு 1 தமிழக அரசைப் பின்பற்றி ஒத்திவைக்கப்படுகிறது.தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளது.

Recent Posts

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

51 minutes ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

1 hour ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

2 hours ago

வெளுத்து வாங்கும் கனமழை.., வால்பாறை பள்ளிகளுக்கு விடுமுறை.!

கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…

2 hours ago

இன்று மாலை ISS-க்குள் நுழைகிறது ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்.! அப்போது என்ன நடக்கும்?

அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…

2 hours ago

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

13 hours ago