கொரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கக்கூடிய குழந்தைகளின் மறுவாழ்வுக்கான வழிமுறைகளை மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனாவின் இரண்டாம் அலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் ஆதரவற்று தனித்து விடப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் பெற்றோரை இழந்து உள்ள குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மகளிர் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில் பெற்றோரை இழந்து பராமரிப்பிற்கு ஆளில்லாத குழந்தைகளை 24 மணி நேரத்தில் மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், குழந்தைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட குழந்தைகள் நல குழுவே வழங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவல்களை 1908 எனும் இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் எனவும், இந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி தெரிவிப்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல பெற்றோரை இழந்து தவித்து கூடிய குழந்தைகள் சட்டபூர்வமாக மட்டுமே தடுக்கப்பட வேண்டும் என்பதால், அதற்கான இணையதளத்தை மத்திய அரசு நேரடியாகவும் வெளியிட்டுள்ளது. அதுபோல இதுபோன்ற குழந்தைகள் குழந்தைகள் பராமரிப்பு மையங்களில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களின் நலன் குறித்து குழந்தைகள் நலக்குழு தொடர்ச்சியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…