Categories: இந்தியா

10 ரூபாய் கேட்ட ரிக்‌ஷா ஓட்டுநர்…ஆத்திரத்தில் கொடூரமாக தாக்கிய திருநங்கை!

Published by
பால முருகன்

மும்பை : ரிக்‌ஷாவில் சென்றுவிட்டு பணம் செலுத்த மறுத்த திருநங்கை ஒருவரிடம் ரிக்ஷா ஓட்டுநர் 10 ரூபாயை கேட்ட நிலையில், ஆத்திரம் அடைந்த திருநங்கை  கடுமையாக ரிக்‌ஷா ஓட்டுநரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முதலில் திருநங்கை சென்று கொண்டிருந்தபோது ரிக்‌ஷா ஓட்டுநர் பணம் கேட்பது போல தெரிகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின் வேகமாக வந்த திருநங்கை ஓட்டுநர் கன்னத்தில் வேகமாக அடித்தார். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கீழே விழ சென்றார்.  திருநங்கை அடிக்க ஆரம்பித்ததால் வாக்குவாதம் முற்றியது. எனவே, ஓட்டுனர், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்று அவரும் தாக்குதலில் ஈடுபட்டார்.

அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் சண்டையை தடுத்து நிறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் தங்களுடைய போனை வைத்து வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். சண்டை மிகவும் பெரிதான காரணத்தால் கோபத்தில் அந்த திருநங்கை தனது உடையை கிழித்துக்கொண்டு ஓட்டுனரை கடுமையாக தாக்கினார்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கை ஒரு பெண் என்று சமூக வலைதளங்களில் வீடியோ அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது, ஆனால், அந்தப் பெண் ஒரு திருநங்கை என்று சமூக வலைதளவாசிகள் கருத்துக் கூறி வருகின்றனர். இன்னும் இந்த சம்பவம் எந்த இடத்தில் நடந்தது என்பது பற்றிய சரியான விவரம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முதற்கட்ட தகவலின் படி, இந்த சம்பவம் மும்பையில் நடந்தது மட்டும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவருக்கு என்ன ஆனது என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை . மேலும், இந்த செய்தியையும், வீடியோவையும் freepressjournal என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

‘வக்பு சட்டத்தால் இஸ்லாமிய மக்கள் பெரும் பாதிப்பு’… ஆதவ் அர்ஜுனா காட்டம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகதின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னையில் இன்று மதியம்…

2 minutes ago

நீலகிரியில் வெளுத்து வாங்க போகும் மழை.! ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா வடதமிழக பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு…

1 hour ago

‘கணவரை பிரிய 3-வது நபரே காரணம்’ – ஆர்த்தி பளிச்.! அப்படி என்ன சொன்னார்.?

சென்னை : ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து விவகாரம் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்…

1 hour ago

‘வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இல்லை’ – அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு .!

சென்னை : மின் கட்டணத்தை 3% உயர்த்த மின் வாரியத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது என தகவல்…

2 hours ago

கல்குவாரி விபத்தில் 5 பேர் பலியான சோகம்.! பேரிடர் மீட்பு படை விரைவு..,

சிவகங்கை: சிங்கம்புணரி அருகே தனியார் கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…

2 hours ago

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

8 hours ago