Categories: இந்தியா

செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் உள்ளது..! பிரதமர் மோடி சிறப்புரை..!

Published by
செந்தில்குமார்

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லியில் சுமார் 64,500 சதுர அடியில், ரூபாய் 970 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெற்ற வருகிறது. அதன்படி, புதிய நாடாளுமன்றத்தில் சாவர்க்கர் ஜெயந்தியை முன்னிட்டு வி.டி.சாவர்க்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

பின் நாடாளுமன்ற அவைக்குள் பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா ஆகிய இருவரும் ஒன்றாக நுழைந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரை உற்சாகமாக வரவேற்றனர். அடுத்ததாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

இதனைத்தொடர்ந்து, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதமர் மோடி தனது முதல் சிறப்புரையை ஆற்றினார். அவற்றை கீழே காணலாம்.

  • ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிப் பயணத்திலும் சில தருணங்கள் அழியாது. அத்தகைய நாள் மே 28 ஆம் தேதி ஆகும். தற்பொழுது, புதிய பாதையில் புதிய பயணத்தை நாம் தற்போது தொடங்கியுள்ளோம்.
  • இந்தியாவின் வளர்ச்சியில் தான், உலக நாடுகளின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. எனவே, இந்த புதிய நாடாளுமன்றமும் இந்தியாவின் வளர்ச்சியில் பங்களித்து உலகின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
  • புதிய நாடாளுமன்றத்தில் கலாச்சாரமும், அரசியல் சாசனமும் இணைந்துள்ளது. எதிர்காலத்தில் எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, அவர்கள் எங்கு அமர்வார்கள். எனவே, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டடம் காலத்தின் தேவையாக உள்ளது.
  • செங்கோல் ஆனது சோழர் காலத்தில் நீதி மற்றும் நல்லாட்சியின் அடையாளமாக விளங்கியது. புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது எங்கள் அதிர்ஷ்டம்.

  • செங்கோல் தற்போதுதான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சபையில் நடவடிக்கைகள் தொடங்கும் போதெல்லாம் ‘செங்கோல் எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
Published by
செந்தில்குமார்

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

9 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

9 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

10 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

10 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

11 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

12 hours ago