இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி – அரசு அனுமதி…!

Published by
Edison

இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகம் செய்ய டன்சோ நிறுவனத்திற்கு தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஹைப்பர்லோகல் டெலிவரி தளமான டன்சோ நிறுவனம்,கடந்த 2014 இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எட்டு நகரங்களில் வான் சேவையை வழங்குகிறது.அதாவது,மருந்துகள்,மளிகை மற்றும் உணவு போன்ற தயாரிப்புகளை மக்களுக்கு உடனடியாக வழங்கி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை அடிப்படையில்,ட்ரோன்களைப் பயன்படுத்த டன்சோ நிறுவனத்தின், “ஸ்கை ப்ராஜெக்ட் மூலம் மருந்து” என்ற திட்டத்திற்கு அனுமதியளித்து,அந்நிறுவனத்துடன் தெலுங்கானா அரசாங்கம் இணைந்துள்ளது.

முன்னதாக,கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக ஆளில்லா ட்ரோன்களை,காட்சிகள் பார்வைக்கு (பி.வி.எல்.ஓ.எஸ்) அப்பால் சோதனை செய்ய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் தெலுங்கானாவுக்கு கடந்த ஆண்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும்,உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால்,ட்ரோன் விநியோகம் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து,டன்சோ டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் கபீர் பிஸ்வாஸ் கூறுகையில்,

“மருத்துவ அத்தியாவசியங்களுக்கான அவசர தேவையை பூர்த்தி செய்ய,ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் எங்கு வாழ்ந்தாலும்,உயிர் காக்கும் அத்தியாவசியங்கள் அவற்றை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.மேலும்,இந்த திட்டத்தில் நாங்கள் பங்கேற்பதன் மூலம்,எதிர்காலத்தில் இந்தியாவில் மருந்துகள், தடுப்பூசிகள், உணவு மற்றும் பிற பொருட்களை மக்கள் உடனடியாக பெரும் வகையில் கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும்”,என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

1 hour ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

2 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

4 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

5 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

6 hours ago