இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி – அரசு அனுமதி…!

Published by
Edison

இனி ட்ரோன் விமானம் மூலம் கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகளை விநியோகம் செய்ய டன்சோ நிறுவனத்திற்கு தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஹைப்பர்லோகல் டெலிவரி தளமான டன்சோ நிறுவனம்,கடந்த 2014 இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை எட்டு நகரங்களில் வான் சேவையை வழங்குகிறது.அதாவது,மருந்துகள்,மளிகை மற்றும் உணவு போன்ற தயாரிப்புகளை மக்களுக்கு உடனடியாக வழங்கி வருகிறது.

இந்நிலையில்,கொரோனா தடுப்பூசிகளை உள்ளடக்கிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்கான சோதனை அடிப்படையில்,ட்ரோன்களைப் பயன்படுத்த டன்சோ நிறுவனத்தின், “ஸ்கை ப்ராஜெக்ட் மூலம் மருந்து” என்ற திட்டத்திற்கு அனுமதியளித்து,அந்நிறுவனத்துடன் தெலுங்கானா அரசாங்கம் இணைந்துள்ளது.

முன்னதாக,கொரோனா தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக ஆளில்லா ட்ரோன்களை,காட்சிகள் பார்வைக்கு (பி.வி.எல்.ஓ.எஸ்) அப்பால் சோதனை செய்ய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சிவில் ஏவியேஷன் இயக்குநர் ஜெனரல் தெலுங்கானாவுக்கு கடந்த ஆண்டு அனுமதி அளித்ததை தொடர்ந்து இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இருப்பினும்,உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. இதனால்,ட்ரோன் விநியோகம் எப்போது தொடங்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது குறித்து,டன்சோ டிஜிட்டல் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் கபீர் பிஸ்வாஸ் கூறுகையில்,

“மருத்துவ அத்தியாவசியங்களுக்கான அவசர தேவையை பூர்த்தி செய்ய,ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், மக்கள் எங்கு வாழ்ந்தாலும்,உயிர் காக்கும் அத்தியாவசியங்கள் அவற்றை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்த முடியும்.மேலும்,இந்த திட்டத்தில் நாங்கள் பங்கேற்பதன் மூலம்,எதிர்காலத்தில் இந்தியாவில் மருந்துகள், தடுப்பூசிகள், உணவு மற்றும் பிற பொருட்களை மக்கள் உடனடியாக பெரும் வகையில் கொண்டு செல்ல பயனுள்ளதாக இருக்கும்”,என்று கூறினார்.

Published by
Edison

Recent Posts

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

சிரியா தேவாலயத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதல்.., 20 பேர் உயிரிழப்பு.!

டமாஸ்கஸ் : சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள டுவைலா பகுதியில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்தில் மிகப்பெரிய தற்கொலை படை…

24 minutes ago

“ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்.., உலகிற்கு பேரழிவு” – ஐ.நா. பொதுச்செயலாளர்.!

ஈரான் : ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 950-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வாஷிங்டனை சேர்ந்த மனித உரிமைகள்…

40 minutes ago

இங்கிலாந்து 465 ரன்களுக்கு ஆல் அவுட்.., பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தல்.!

லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…

2 hours ago

சைலண்டாக சம்பவம் செய்த அமெரிக்கா.., 25 நிமிடங்களில் துவம்சம் பி2 போர் விமானங்கள்.!

அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…

2 hours ago

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

16 hours ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

17 hours ago