தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்த நபருக்கு மரண தண்டனை.
மேற்கு வங்கம் மாநிலத்தில் வசித்து வருபவர், கம்ருஸ்மான் சர்க்கார் (38). இவர் அந்த மாநிலத்தில் தொடர்ந்து தொடர் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் இதுவரை 9 பெண்களை கொலை செய்துள்ளார். மேலும், இதில் 2 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் காவல்துறையினரின் கைவசம் சிக்கியுள்ளார். கிழக்கு பர்த்வான் மற்றும் ஹூக்லி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் இதுவரை இவர் மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த குற்றச் சம்பவங்கள் 2013 முதல் 2019ம் ஆண்டிற்குள் நடந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் பொதுவாக, ஆண்கள் வேலைக்கு சென்ற பின், அந்த பெண்களை குறிவைத்து கொலை செய்வது மட்டுமல்லாமல், சில சமயங்களில் மின்வாரிய அதிகாரி போல் வீடுகளுக்குள் நுழைந்து உலோக சங்கிலியால் பெண்களின் கழுத்தை நெரித்து கொலை செய்வதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
கிழக்கு பர்த்வான் மாவட்ட நீதிமன்றத்தில், இந்தக்கொலை சம்பவங்கள் தொடர்பான வழக்கு, நடந்து வந்த நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தண்டனை குறித்து தெரிவித்துள்ள நீதிமன்றம், அவர் கொடூரமான செயல்களில் ஈடுபட்டதாகவும், அதனால் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…