சிறைச்சாலையில் நடந்த திருமணம்! மண்டபம் என்னாச்சி ? காரணம் இதுதாங்க!

Published by
லீனா

பஞ்சாப் மாநிலம் நபா பகுதியை சேர்ந்தவர் மன்தீப் சிங் என்ற துருவ். இவர் பஞ்சாயத்து தலைவரை கொன்ற குற்றத்திற்காக, இவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு வயது 35-ஐ கடந்துள்ள நிலையில், தனது 10 வருடங்களை சிறையில் கழித்து விட்டார்.
இந்நிலையில், கன்னா பகுதியை சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனையடுத்து, துருவ் தனது திருமணத்திற்காக பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், இவர் இதை வைத்து தப்பிக்க முயல்கிறார் என்று இவருக்கு பரோல் வழங்குவதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து, 2016-ம் ஆண்டு பாவந்தீப் கவுர் துருவின் புகைப்படத்தை வைத்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன், துருவ் மீண்டும் பரோல் கேட்டு முறையிட்டார். இதனை விசாரித்த நீதிமன்றம், சிறை வளாகத்திலேயே திருமணம் செய்துகொள்ள 6 மணிநேரம் அனுமாகி கொடுத்துள்ளது. மேலும், இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிறைத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சிறையில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இவரை அங்கிருந்த போலீசார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர். 6 மணி நேரத்திற்கு பின் துருவ், மனைவியை பிரிய முடியாமல், மிகுந்த கவலையுடன் சிறைக்கு திரும்பினார்.

Published by
லீனா

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

2 hours ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

2 hours ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

4 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

5 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

5 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

5 hours ago