டவ்-தே புயல் மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது மரம் ஒன்று வேகமாக விழுந்துள்ளது. அப்போது அங்கிருந்த பெண் நூலிழையில் உயிர்தப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தென்மேற்கு அரபி கடல் பகுதியில் உருவான டவ்-தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே கரையை கடக்க தொடங்கியது.
இதனால் குஜராத், சவுராஷ்டிரா, மும்பை, ராஜஸ்தான், ஆகிய பகுதியில் கனமழை பெய்தது. டவ்-தே புயல் தாக்கம் காரணமாக குஜராத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மேற்கு மாநிலங்களிலும் புயலின் தாக்கத்தால் மகாராஷ்டிராவில் 12 பேரும், கர்நாடகாவில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், மும்பையில் கனமழை பெய்து வருகின்ற நிலையில், தண்ணீர் வீட்டிற்குள் சென்று மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் டவ்-தே புயல் மும்பையில் பலத்த காற்றுடன் கடக்கும்பொழுது அங்கிருந்த பெரிய மரத்தின் கீழ் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த மரம் சரிந்து கீழே விழுவதை பார்த்த அந்த பெண் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…