[Image source : EPS]
எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்ததை பார்த்ததில்லை என்று தீயணைப்பு துறை தலைமை அதிகாரி வேதனை.
ஒடிசா பால்சோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணி அளவில் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியது. இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இரவு ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படை மற்றும் ராணுவ குழுக்கள் உள்ளிட்ட பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பயணங்கள் மீட்பு பணி நிறைவடைந்து, மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஒடிசா விபத்தில் ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஒடிசா தீயணைப்பு துறை தலைமை அதிகாரி சுதன்ஷு, ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்த கிரேன் வந்துள்ளது. இடிபாடுகளில் யாரும் சிக்கியிருக்க மாட்டார்கள் என நம்புகிறோம். நாங்கள் மனமுடைந்து போய் உள்ளோம். எங்கள் வாழ்நாளில் இவ்வளவு பேர் விபத்தில் உயிரிழந்ததை பார்த்ததில்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…