கொரோனா தடுப்பூசிக்காக ஹைதராபாத்தை உலகம் தேடுகிறது என்று தெலுங்கானா கவர்னர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலமான ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஐ.சி.எம்.ஆர் எனப்படுகின்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் தேசிய வைராலஜி மையம் இணைந்து இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியான, “கோவாக்சின்” தடுப்பூசி மருந்தை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை நேரில் சென்று பார்வையிட்ட தமிழிசை சவுந்தரராஜன். அங்கு அவர் கூறுகையில், திறம்பட்ட கொரோனா தடுப்பூசிக்காக உலகம் முழுவதும் ஹைதராபாத்தை நோக்கி வருவதாக நேற்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கி வரும் விஞ்ஞானிகள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். தெலுங்கானா மட்டுமல்ல, நமது விஞ்ஞானிகள் ஒரு பயனுள்ள, மலிவு மற்றும் பாதுகாப்பான தடுப்பூசியை கொண்டு வருவார்கள் என்று உலகம் முழுவதும் நம்புகிறது என்று கூறினார்.
அந்த வகையில், தடுப்பூசியை தயாரிக்க விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அயராது உழைத்து வருவதாகவும், இந்த வருட இறுதிக்குள் இது தொடங்கப்படும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…