college student who beat him with a sandal [Image source : file image]
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் விடுதியில் இருந்து பெண் ஒருவர் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து சென்று நபர் ஒருவர் துன்புறுத்தியுள்ளார். மாணவியை பின்னால் இருந்து அணுகி அநாகரீகமாக அந்த நபர் நடந்து கொண்டார்.
தனது பாதுகாப்பிற்கு பயந்து, மாணவி தனது குரலை உயர்த்தி, அருகிலுள்ள குடியிருப்பாளர்களை உதவிக்காக அழுதுகொண்டே அழைத்தார். அவர் அழுத சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து துன்புறுத்திய அந்த நபரை தப்பிக்கவிடாமல் பிடித்தனர்.
பிறகு, அந்த மாணவி மிகவும் கோபத்துடன் காலில் போட்டிருந்த செருப்பை கழட்டி அழுதுகொண்டே பின்தொடர்ந்து துன்புறுத்திய அந்த நபரின் கன்னத்தில் ப்ளார்..ப்ளார்..என பல முறை அறைந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. விரைந்து வந்த அதிகாரிகளிடம் குற்றவாளியை பிடித்து அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.பின், குந்தாப்பூர் காவல் நிலையத்தில் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…