பணத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை கடத்திவிட்டு, எரித்துக்கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் மகபூப் என்னும் நகரில் கிருஷ்ணா காலனி எனும் பகுதியை சேர்ந்த ரஞ்சித் – வசந்தா ஆகியோரின் மகன் தான் ஒன்பது வயதுடைய தீட்சித். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியில் விளையாடிக்கொண்டிருந்த தீட்சித் இரவு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை என்பதால் பதற்றமடைந்து குழந்தையை தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அன்று இரவே அச்சிறுவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் தீட்சித்தை தான் கடத்தி வைத்திருப்பதாகவும் நாற்பத்தி ஐந்து லட்சத்தை கொடுத்துவிட்டு அவனை மீட்டு செல்லும்படி கூறி இணைப்பை துண்டித்துள்ளார் அந்த மர்ம நபர். இது குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதன்பின் கடத்தியவரை பிடிப்பதற்காக போலீஸ் அறிவுரைப்படி நேற்று முன்தினம் மகபூப்நகர் கூட்டு ரோட்டில் பணத்துடன் ரஞ்சித் சில மணி நேரம் வரை காத்திருந்து உள்ளார். ஆனால் அங்கு யாரும் வரவில்லை ஆனால், நேற்று காலை ஊருக்கு வெளியே தீட்சித்தின் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ரஞ்சித் அவர்களின் குடும்பத்திற்கு நன்கு பழக்கமான 22 வயதுடைய சாகர் எனும் இளைஞர் தான் என அறிந்து, அதன்பின் போலீசார் அவரை பிடித்து விசாரித்த பொழுது பணத்துக்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாகவும், ஆனால் சிறுவனாக இருந்தாலும் தீட்சித் தன்னை அடையாளம் கண்டுகொண்டதால் வெளியே சொல்லி விடுவான் என்ற அச்சத்தில் அவனை கொலை செய்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…