கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.
கொரோனா பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் (முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி ) செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகே கூடுதல் டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக கடந்த ஒருசில வருடங்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் முதலில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வரும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி, கடந்த 10-ம் தேதி முதல் முதல்கட்டமாக சுகாதாரப பணியாளர்கள், காவல்துறை உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே பூஸ்டர் டோஸ் உள்பட அனைத்துவித கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…