கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் இன்று தொடங்குகிறது.இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை இரண்டாவது அமர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,பட்ஜெட் கூட்டத்தொடர் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது.அனைத்து கட்சிகளின் கருத்தும் வரவேற்கப்படுகிறது.இந்த கூட்டத்தொடரில் அனைத்து விவகாரங்களும் விவாதிக்கப்படும். இந்த கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக அமையும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது.தற்போது நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற 10 ஆண்டுகளுக்கானது. அடுத்த 10 ஆண்டுகள் இந்தியா செல்லவுள்ள ஒளிமயமான பாதைக்கு தங்கமயமான வாய்ப்பு தான் இந்த கூட்டத்தொடர் என்று கூறியுள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…