தன்னுடைய எல்லா உடைமைகளை இழந்த நிலையிலும், மற்றவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்ட மூதாட்டி.
கொரோனா வைரஸ் பரவல் மக்களை அச்சுறுத்த, இயற்கையின் மாற்றங்களும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வெல்ல பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அவஸ்தைபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மும்பையில் அண்மையில் பெய்த கனமழையால், சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மும்பையைச் சேர்ந்த காந்தா மாருதி காலன் என்ற 50 வயது பெண், துள்சி பைப் சாலையில் பூக்கடை வைத்து நடத்தி வந்த நிலையில், அந்த இடம் தான் அவர் வசிக்கும் இடமாகவும் இருந்தது.
இந்நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், அவரது உடைமைகள் முழுவதும் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிய, மாநகராட்சி ஊழியர்கள் வரும்வரை காத்திராமல், பாதாள சாக்கடை பள்ளத்தை திறந்து வைத்து, பள்ளத்தில் சிக்கி வாகன ஒட்டிகளுக்கு பாதிப்பு ஏதும் வந்துவிடக் கூடாது எனும் நோக்கில் அங்கேயே நின்று மக்களுக்கு வழிகாட்டினார். இந்தச் செயல் பலரையும் நெகிழ வைத்தது.
தன்னுடைய எல்லா உடைமைகளை இழந்த நிலையிலும், மற்றவர்கள் மீது அக்கறையுடன் செயல்பட்ட, இந்த மூதாட்டிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…