“பப்ஜி உட்பட 118 செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான்!”- குளோபல் டைம்ஸ் கருத்து

Published by
Surya

பப்ஜி உட்பட 118 சீனா செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான் என சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.

இதைதொடர்ந்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதன்பின், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீனா தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய அரசு, பப்ஜி உட்பட 118 சீனா செயலிகளை தடை செய்ததற்கான காரணம் இதுதான் என சீனா ஊடகமான குளோபல் டைம்ஸ் , தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முடங்கியது காரணமாக ஏற்படக்கூடிய வீழ்ச்சியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இந்த 118 சீன செயலிகளை இந்திய அரசாங்கம் தடை செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இது மோடி அரசின் சாதனை மேட்டரும் சந்தர்ப்பவாதத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறதாக தெரிவித்தனர்.

Published by
Surya

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

17 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

39 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

52 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

3 hours ago