அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை என ராகுல் காந்தி பேட்டி.
டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு கூட்டத் தொடரில், அமளியில் ஈடுபட்டதாக கூறி எதிர்க்கட்சியை 12 எம்.பி-க்களை மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று இந்த செயலை கண்டித்து ராகுல் காந்தி மற்றும் பல தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியில் ஈடுபட்டனர்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களின் குரல் நசுக்கப்படுவதற்கு அடையாளமாகும். எம்பிக்களின் குரல் நசுக்கப்படுகிறது. அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. நாடாளுமன்றத்தில் முக்கியமான பிரச்சினைகளை விவாதிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை. அமளிக்கு மத்தியில், தொடர்ந்து வரிசையாக மசோதா நிறைவேற்றப்படுகின்றன இது நாடாளுமன்றத்தை நடத்த முறை இல்லை. இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை ஆகும் என்றும், பிரதமர் மோடி அவைகளுக்கு வருவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…
டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…
சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…
லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…
சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…