இது என்னுடைய கடைசி போராட்டமாக இருக்கும்! ஜனவரி-30ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அண்ணா ஹசாரே…!

Published by
லீனா

எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும்.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து, இரண்டு மாதங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பதாக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் பெரிய அளவில் கலவரங்கள் வெடித்ததில் காவல்துறையினர் காயமடைந்தனர். மேலும் இதில் ஒரு விவசாயி உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து, அண்ணா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ஜனவரி 30 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ஜனவரி 30-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், தனது ஆதரவாளர்கள் அந்தந்த இடங்களில் எதிர்ப்பு தெரிவிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். மேலும் விவசாயிகள் தொடர்பான தனது கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால், அவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட போவதாகவும், இது தனது கடைசி எதிர்ப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசாங்கம் வெற்று வாக்குறுதிகள் மட்டுமே தருகிறது. இதன் காரணமாக எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. எனது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்ப்போம்.  அவர்கள் ஒரு மாதத்திற்கு நேரம் கோரியுள்ளனர், எனவே ஜனவரி இறுதி வரை அவர்களுக்கு நேரம் கொடுத்துள்ளேன். எனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், எனது உண்ணாவிரத போராட்டத்தை மீண்டும் தொடங்குவேன். இது எனது கடைசி போராட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

17 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

38 minutes ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

45 minutes ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

1 hour ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

1 hour ago

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

2 hours ago