தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பவர்களுக்கு விடுமுறையோ, சலுகையோ கிடையாது – பஞ்சாப் அரசு!

Published by
Rebekal

தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயங்கும் முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்வதற்கான விடுமுறையோ அல்லது தொற்று ஏற்பட்டால் அதற்கான மருத்துவ செலவோ கொடுக்கப்பட மாட்டாது என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் வீரியத்தை குறைப்பதற்காக நாடு முழுவதிலும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி முதல் கட்டமாக முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு போட்டுக்கொண்டிருக்கிறது. தடுப்பூசி குறித்த சில வதந்திகள் பரவி வந்தாலும் அவை அனைத்தும் தவறானது என மத்திய அமைச்சர்களால் மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது பல இடங்களில் முன் களப்பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களே தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மறுக்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கும் தடுப்பூசி மீது அச்சம் தான் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்ப்பதற்காக பஞ்சாப் அரசு தற்போது ஒரு அதிரடியான முடிவை அறிவித்துள்ளது.

அதன்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு சிறிது நாட்கள் கழித்து கொரோனா தொற்று ஏற்பட்டால் தனிமைப்படுத்தி கொள்வதற்கான விடுமுறையோ அல்லது மருத்துவ செலவுக்கான உதவியோ கிடைக்காது எனவும், அந்த செலவை நீங்களே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டிய நிலை வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பஞ்சாப் சுகாதார அமைச்சர் பல்பீர் சிங் அவர்கள், பஞ்சாபில் யாருக்கும் எந்த மோசமான பக்க விளைவோ அல்லது உயிர் இழப்போ தடுப்பூசியால் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும், 2.6 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள், 1.82 லட்சம் முன்கள பணியாளர்களும் ஏற்கனவே கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது 79 ஆயிரம் சுகாதார பணியாளர்களும், நான்காயிரம் முன் களப்பணியாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டு உள்ளதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார். வதந்திகள் மற்றும் தவறான தகவல்களால் யாரும் பாதிக்கப்படா வேண்டாம் எனவும், தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக பாதுகாப்பானது தான் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

7 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

8 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

8 hours ago