மூன்று வருட முகநூல் காதல் – நேரில் வரச்சொல்லி பணத்தை கொள்ளையடித்துச் சென்ற காதலன்!

Published by
Rebekal

முகநூலில் மூன்று வருடமாக காதலித்து விட்டு நேரில் வரச் சொல்லி காதலியிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற காதலன் கைது.

ஜார்க்கண்டில் வசித்து வரக்கூடிய ஒரு இளம் வயதுடைய பெண்மணி ஒருவரும் அபிஷேக் தாக்கூர் எனும் ஒரு இளைஞரும் பேஸ்புக் மூலமாக நண்பர்களாகி உள்ளனர். இருவருமே ஜார்கண்டில் வசித்து வந்ததால் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியுள்ளது. கடந்த மூன்று வருடங்களாக இவர்கள் இருவரும் தொடர்ந்து பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அந்தப் பெண்மணி வேலைக்காக ஜார்கண்டில் இருந்து மும்பைக்கு சென்றுள்ளார். இருந்தாலும் இருவரும் பேஸ்புக் மூலமாக தொடர்ந்து தொடர்பிலேயே இருந்துள்ளனர். இதன் பின் இவர்கள் இருவரும் தன்னிச்சையாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேற நினைத்துள்ளானர். எனவே அந்த பெண் தான் சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் ஒரு பையுடன் வெளியில் வந்துள்ளார்.

அப்பொழுது அவரது காதலனுடன் பாட்னா வரை சென்றுள்ளார். பாட்னாவை கடந்த பின்பு அவரது காதலன் அந்தப் பெண்மணியை அவனது வீட்டிற்கு அழைத்து செல்ல விருப்பம் காட்டாமல் இருந்துள்ளார். அதன்பின் அந்த பெண்மணி வைத்திருந்த ஒன்றரை லட்சம் பணம் மற்றும் அவரிடமிருந்து நகைகளைப் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அப்பெண்மணி போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளனர். மேலும் அப்பெண்மணி அளித்துள்ள புகாரின் அடிப்படையில் அபிஷேக் தாக்கூர் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

7 minutes ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

1 hour ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

2 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago