அமைச்சர் சஞ்சய் ரத்தோட் மீது புகார் தெரிவித்து வந்த நிலையில் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பீட் நகரிலிருந்து புனேவுக்கு படிப்பிற்காக வந்த டிக்-டாக்கில் பிரபலமான இளம்பெண் பூஜா சவான் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இளம்பெண்ணின் மரணத்திற்கும், சிவசேனாவை சேர்ந்த வனத்துறை மந்திரி சஞ்சய் ரதோடுக்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த விவகாரத்தில் சஞ்சய் ரதோட் பதவி விலக வேண்டும் என பாஜக வலியுறுத்தியது. ஆனால், சஞ்சய் ரதோட் கூறுகையில், இளம்பெண்ணின் மரணத்திற்கும் எனக்கும் தொடர்பு கிடையாது என கூறினார்.
பா.ஜ.க. தொடர்ந்து இந்த விவகாரத்தில் நெருக்கடி அளித்து வந்த நிலையில் ரதோட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து செய்தியர்களிடம் கூறுகையில், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் வழங்கியதாக கூறினார்.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…