நம் நாட்டில் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. 5-வது நாளாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவில் டெல்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உண்மையான கொரோனா மரணங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை, மரணங்களில் நிறைய தவறுகள் உள்ளது என்று கூறப்பட்டது.
சில கொரோனா மரணங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், நேற்று கூடுதலாக 2004 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரம் உள்ளது. அதில், மகாராஷ்டிராவில்தான் அதிகமாக 1328 மரணங்களும், டெல்லியில் 437 மரணங்கள் பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் அதிகரித்ததால் கொரோனா இறப்பு விகிதம் 2.9% இல் இருந்து 3.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 5651 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். அதில், மும்பையில் மட்டும் 917 பேர் பலியாகியுள்ளனர். இதேபோல் டெல்லியிலும் மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 1904 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை 11,903 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின்…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) திராவிட முன்னேற்றக்…
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள்…
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான…
நொட்டிங்காம் : ஸ்மிருதி மந்தனாவின் அதிரடி சதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20…