இன்று மத்திய பிரதேசத்தில் பிரதமர் மோடி பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை துவங்கி வைக்கிறார்.
இன்று தேசிய பஞ்சாயத்து தினமானது நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதனை குறிப்பிட்டு இன்று மகாராஷ்டிராவில் ரேவா மாவட்டத்தில் இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் உள்ள பஞ்சாயத்து ராஜ் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் கிராம சபைகளின் பிரதிநிதிகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த விழாவில், பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 4.11 லட்சம் பயனாளிகளுக்கு காணொளி வாயிலாக புதிய வீடுகளை வழங்க உள்ளார். மேலும், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ₹ 7,853 கோடி மதிப்பிலான பல்வேறு மக்கள் நலப்பணிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்களால் 4,036 கிராமங்களைச் சேர்ந்த 9.48 லட்சம் குடும்பங்கள் பயனடைய உள்ளது என கூறப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் படேல், அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், மத்திய இணை அமைச்சர் ஃபக்கன் சிங் குலாஸ்தே ஆகியோர் பிரதமர் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவில், பஞ்சாயத்து அளவில் கொள்முதல் செய்து கொள்வதற்கான ஒருங்கிணைந்த இ-கிராம்ஸ்வராஜ் மற்றும் ஜிஇஎம் (government e-marketplace) இணையதளத்தையும் மோடி திறந்து வைக்கிறார்.
சென்னை : சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். ஆறு பேர்…
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…