Categories: இந்தியா

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு.!

Published by
கெளதம்

நாட்டின் பல நகரங்களில் பெட்ரோலை விட தக்காளி விலை அதிகம். தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறி வரும் நிலையில், கர்நாடகாவில் தக்காளி திருட்டு நடந்துள்ளது.

கர்நாடகாவில், தக்காளி விளைச்சல் பண்ணையிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹளேபிடு தாலுகாவில் உள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமசேகர் என்பவரது தோட்டத்தில் திருட்டு நடந்துள்ளது. இவர், மூன்று ஆண்டுகளாக தக்காளி சாகுபடி செய்து வருகிறார்.

இவரது பண்ணைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருடர்கள் புகுந்தனர். 60 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தக்காளி திருடப்பட்டது. அது ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் வேளையில், தக்காளி திருட்டு நடந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்படுகிறது

Published by
கெளதம்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

12 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

13 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

16 hours ago