Categories: இந்தியா

கர்நாடகாவில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு.!

Published by
கெளதம்

நாட்டின் பல நகரங்களில் பெட்ரோலை விட தக்காளி விலை அதிகம். தக்காளி விலைமதிப்பற்ற பொருளாக மாறி வரும் நிலையில், கர்நாடகாவில் தக்காளி திருட்டு நடந்துள்ளது.

கர்நாடகாவில், தக்காளி விளைச்சல் பண்ணையிலிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடப்பட்டுள்ளது. கடந்த ஒருவாரமாக தக்காளி விலை நாடு முழுவதும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பண்ணை ஒன்றில், ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருடுபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விவசாயி அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹளேபிடு தாலுகாவில் உள்ள கோனி சோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சோமசேகர் என்பவரது தோட்டத்தில் திருட்டு நடந்துள்ளது. இவர், மூன்று ஆண்டுகளாக தக்காளி சாகுபடி செய்து வருகிறார்.

இவரது பண்ணைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருடர்கள் புகுந்தனர். 60 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ தக்காளி திருடப்பட்டது. அது ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள தக்காளி. இந்தியா முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வரும் வேளையில், தக்காளி திருட்டு நடந்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.100 முதல் 120 வரை விற்கப்படுகிறது

Published by
கெளதம்

Recent Posts

திருவள்ளூர் ரயில் விபத்து: ரயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.!

சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…

5 hours ago

2 ஆவது விக்கெட்டை வீழ்த்தி சிராஜ் அசத்தல்! இங்கிலாந்து அணி கதறல்!

லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…

5 hours ago

இயக்குநர் பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழப்பு.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…

6 hours ago

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…

6 hours ago

புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் தற்கொலை.! நடந்தது என்ன.?

உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

6 hours ago

பாலியல் வன்கொடுமை.., பொதுவெளியில் தண்டனை அளித்த ஈரான் அரசு.!

புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…

7 hours ago