2020 ஆம் ஆண்டில் ஸ்விக்கியில் முதலிடம் பிடித்த பிரியாணி ஆர்டர்!

Published by
Rebekal

இந்த வருடம் இந்தியர்களுக்கு மிகப் பிடித்தமான உணவாகவும் வினாடிக்கு ஒன்றுக்கும் மேற்பட்டு ஆர்டர் செய்யப்பட்ட உணவாகவும் சிக்கன் பிரியாணி உள்ளது என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபலமான ஆன்லைன் உணவு பரிமாறும் செயலி தான் ஸ்விக்கி. இந்த ஸ்விக்கி செயலி மூலமாக பல மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை விருப்பமான நேரங்களில் ஆர்டர் செய்து வாங்கி உண்டு வருகின்றனர். ஆர்டர் செய்த சில மணி நேரங்களிலேயே வீட்டினை வந்தடையும் இந்த ஸ்விக்கி உணவுக்கு பலரும் அடிமைகளாக உள்ளனர் என்றுதான் கூறியாக வேண்டும். அதிலும் இந்த ஸ்விக்கி உணவிலேயே இந்தியர்களுக்கு மிக பிடித்தமான உணவாக இந்த வருடம் சிக்கன் பிரியாணி தான் உள்ளது என நிறுவனத்தின் மூலமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுததோறும் வெளியிடப்பட கூடிய ஸ்டேட் ஸ்டிக்ஸ் எனும் தரவுகளின்படி 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வருடம் புதியதாக சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்து வாடிக்கையாளர்களாகி உள்ளதாகவும், அலுவலக முகவரிகளை விட, வீட்டு முகவரிக்கு தான் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் அதிகமாக உணவுகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பிந்தைய ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 9 மடங்கு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாகவும், வேலை செய்யும் பலர் டீ மற்றும் காபியை அதிகமாக ஆர்டர் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர். பின்பு பானிபூரி அதிக அளவில் ஆர்டர் செய்யப்பட்டதாகவும் தெரிவித்த ஸ்விக்கி நிறுவனம், பெங்களூரில் 150 சதவீதம் மக்கள் சத்தான உணவுகளை ஆர்டர் செய்ததாகவும், தில்லியில் உள்ள மக்கள் அதிக சத்தான உணவுகளை ஆர்டர் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிக்கன் பிரியாணியை விரும்பி ஆர்டர் செய்துளளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு இந்தியர்களின் பிடித்தமான உணவாக பிரியாணி தான் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் ஸ்விக்கி நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளதும்.

Published by
Rebekal

Recent Posts

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

55 minutes ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

2 hours ago

ஆபாச வசனங்கள் அதிகம்…ரசிகர்களை பதற்றத்தில் ஆழ்த்திய “ஸ்க்விட் கேம் 3”! விமர்சனம் இதோ!

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…

5 hours ago

வடசென்னை பாணியில் சிம்புவை வைத்து படம்…”ஒரு ரூபாய் கூட தனுஷ் வாங்கல”! வெற்றிமாறன் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால்  நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…

6 hours ago

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

6 hours ago