நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பொருளாதரம் மீண்டெழுந்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா காரணமாக கேரளாவில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கேரளா மாநில சுற்றுலாத்துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.
இதுகுறித்து கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன், சுற்றுலாத்துறை கிட்டத்தட்ட ரூ.25,000 கோடி இழப்பை சந்தித்ததாகவும், இதனால், இது பெரும் வேலை இழப்புகளையும் ஏற்படுத்தியது என்று அவர் கூறினார். மேலும், கேரளாவில் சுற்றுலாத் துறையை உயர்த்துவதற்காக 26 புதிய திட்டங்களைத் தொடங்கி உள்ளார்.
இந்த திட்டங்கள், திருவனந்தபுரத்தில் உள்ள மலையக சுற்றுலா மையமான பொன்முடியில் இருந்து வடக்கு திசையில் காசராகோடு வரை பரவியுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள போத்துண்டி மற்றும் மங்கலம் அணைகளில் உள்ள தோட்டங்களும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள 'சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த 'ரெட்ரோ' திரைப்படம் நேற்று (மே 1)…