Rishikesh Riverfight [Image- Screenshot Tweet/@ official_uttarakhand_walee]
ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங் செய்யும் போது சுற்றுலாப் பயணிகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் சில சுற்றுலாப் பயணிகள் கங்கை நதியின் நடுவே ரிவர் ராஃப்டிங்(River rafting) சென்றுள்ளனர். ரிவர் ராஃப்டிங் என்பது நீர்நிலைகளில் மிதக்கும் பலூன் போன்ற படகுகளில் சென்று விளையாடும் பொழுதுபோக்கு நிகழ்வாகும். பெரும்பாலும் இதில் பயணிக்கும் போது ஆபத்துகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் பயணிகள் ரிவர் ராஃப்டிங் செய்யும்போது அவர்களிடையே ஏற்பட்ட சலசலப்பு வன்முறையில் முடிந்துள்ளது, இது கேமராவில் சிக்கியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. படகுகளில் அமர்ந்திருந்த இரு அணிகள் ஒருவரையொருவர் ராஃப்டிங் துடுப்பால் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் இருந்து தப்பிக்க படகுகளில் இருந்து ஆற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை அடுத்து முனி கி ரெட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரித்தேஷ் ஷா, இது மிகவும் ஆபத்தான சண்டை. நாங்கள் இந்த வழக்கை விசாரித்து வருவதாகக் கூறினார்.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…