Manipur riots - Supreme Court of India [File Image]
மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கடந்த மே மாதம் முதல் துவங்கி இன்னும் அம்மாநில மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் இன்னுமும் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மணிப்பூர் வன்முறையில் பெண்களுக்கு பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. விடீயோக்கள் மூலம் வெளியாகி பார்ப்போர் நெஞ்சை பதறவைத்தன. மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை வழக்குகளை சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில், பாதிப்பு ஏற்பட்ட மணிப்பூர் மாநிலத்திலேயே இந்த வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்றால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உருவாகும் என கூற்றுகள் எழுந்த பிறகு, உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதில், சிபிஐ இந்த வழக்கை மணிப்பூரில் வைத்து விசாரிக்க வேண்டாம் எனவும், அசாம் மாநிலத்தில் இதன் மீதான விசாரணையை மேற்கொள்ளுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ , மணிப்பூர் பாலியல் வன்கொடுமைகள் குறித்து மொத்தமாக 21 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…