சந்தனமரம் கடத்தப்பட்டு அதனை அழிவுப்பதைக்கு கொண்டு சென்றுவிட்டு தற்போது மீண்டும் செம்மரத்தை அழிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கடத்தல் கும்பல்களுக்கு எத்தனை எங்கவுண்டர் நடந்தாலும் உரைக்காது போலும். ஏற்கனவே திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பலை காவல்துறையின சுட்டுக்கொன்றனர். எனினும் இந்த கடத்தல் சம்பவங்கள் குறைந்த பாடில்லை. இந்நிலையில், செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவல் நிலைய கூடுதல் கமாண்டன்ட் ரவிசங்கர் உத்தரவின்படி ஆர்எஸ்ஐ வாசு, நரசிம்மராவ் தலைமையிலான போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ஸ்ரீகாளகஸ்தி மண்டலம் மேல்சூர் – வம்பப்பல்லி சாலையில் சென்றபோது பள்ளம் வனப்பகுதியில் சந்தேக படும்படியாக நீண்ட நேரம் நின்று கொண்டிருந்த காரை சோதனை செய்தபோது அதில் 6 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதைனையடுத்து அந்த காரில் இருந்த காசிராம் பேட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணி(31) என்பவரை பிடித்து விசாரித்தபோது வனப்பகுதியை ஒட்டியுள்ள தண்ணீர் குட்டையில் மேலும் 10 செம்மரக்கட்டைகள் மறைத்து வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மொத்தம் 16 செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். இந்த செம்மரக்கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…